அவர் ரொம்ப பெரிய குடும்பம்.. நாங்க இப்பவும் தொடர்புலதான் இருக்கோம், ஆனா.. முதல் முறையாக தனது காதலர் ரிச்சர்ட் குறித்து மனம் திறந்த ஷகிலா…

By Sumathi on ஜனவரி 23, 2024

Spread the love

கடந்த 1990களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த நடிகைகளில் மிக முக்கியமான ஒருவராக இருந்தவர் நடிகை ஷகிலா. சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சி படங்களில் நடித்து, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர். சமீபத்தில் அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் என்பவரை தாக்கி, பதிலுக்கு அவரும் ஷகிலாவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளளது. இந்நிலையில் அதற்கு முன்பு ஒரு நேர்காணலில் ஷகிலா தனது காதல் அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.

   

எனக்கு 11 வயது, அவனுக்கு 14 வயதுதான் இருக்கும். பிளே ஸ்டேஷன் என்ற கேம் விளையாட இருவரும் வீட்டில் இருப்போம். அதில் பேய் விளையாட்டும் இருக்கும். அதை தனியாக விளையாட பயந்துக்கொண்டு அவனையும் வரச்சொல்லிவிட்டு இருவரும் பக்கத்தில் உட்கார்ந்து விளையாடுவோம்.

   

அப்போது ஒருமுறை கேமில் என்னை தாக்க வந்தவனை அவன் தடுத்து தாக்கி விளையாடினான். அப்படி விளையாட்டில் கூட என்னை யாரும் அடிக்க கூடாது என தடுத்து அவன் தாக்கியது எனக்கு அவன் மீது ஒரு இன்ஸ்பையரை ஏற்படுத்தியது. உடனே அவனை பார்த்து ஐ லவ்யு என்று சொன்னேன். அவனும் ஐ லவ்யு டூ என்று சொன்னான்.

 

 

என்னுடைய அப்பா இறந்த போது அவரும் வந்திருந்தார். கடைசியாக அழுதுக்கொண்டிருந்த என்னை பார்த்து, கண்களிலேயே ஆறுதல் சொன்னார். அப்போது அந்த உணர்வு எங்களுக்குள் கனெக்ட் ஆகி விட்டது. அதன்பிறகு அவரும் நடிப்பதில் பிஸியாகி விட்டார். நானும் பிஸியாகி விட்டேன். இப்பவும் எங்களுக்குள் தொடர்பு இருக்கிறது.

போனில் எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவோம். எல்லாவற்றையும் டிஸ்கஸ் பண்ணுவோம். அவர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர். எல்லாவற்றையும் இழந்து நாங்கள் ஒன்று சேர வாய்ப்பில்லை என்ற காரணத்தால், நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என,தனது காதலர் ரிச்சர்ட் குறித்து மனம் திறந்து அதில் பேசியிருக்கிறார் நடிகை ஷகிலா.