வீட்டில் உள்ள குடும்ப பெண்கள் பொழுதுபோக்கிற்காக பார்க்கும் நிகழ்ச்சிகள் ஒன்று சீரியல். ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பலவிதமான சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஒரு சில சீரியல் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறது.
அதுபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ‘செம்பருத்தி’.இந்த சீரியல் ஆயிரம எபிசோடுகளை தாண்டி சாதனை படைத்தது. தற்பொழுது இந்த சீரியல் முடிவடைந்த நிலையில், நடிகை ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.
நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தற்பொழுது தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஷபானா. இவர் அவ்வப்பொழுது தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் தனது நெருங்கிய தோழியான ரேஷ்மாவுடன் நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இவரது தோழியான ரேஷ்மாவும் பிரபல சீரியல் நடிகை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.