நான் நல்லா இருக்கிறதுக்கு காரணமே இயக்குனர் பாண்டிராஜ் தான்… ஓப்பனாக பேசிய நடிகை சீதா..!!

By admin on ஐப்பசி 20, 2024

Spread the love

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த சீதா பாண்டியராஜன் இயக்கத்தில் ரிலீசான ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோருடன் இணைந்து சீதா சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் டிவி, சூர்யா டிவி, மெகா டிவி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியல்களிலும் நடித்துள்ளார். சீதா நடிகர் பார்த்திபன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2001 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

   

 

இந்த நிலையில் நடிகை சீதா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதல் படம் நான் பாண்டியராஜன் சார் கூட பண்ணினேன். அதுக்கப்புறம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஒரு சில பிரச்சனை. ஒரு 4,5 வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் நடிக்க வந்தேன். எங்க டைரக்டர் மேல எனக்கு ரொம்ப மரியாதை வந்துச்சு. எனக்கு சினிமா ப்ரொபஷன் மட்டும்தான் தெரியும். என்ன காப்பாத்துனது, கை கொடுத்து தூக்கி விட்டது எல்லாமே சினிமா தான்.

இது நான் ரெண்டாவது நடிக்க வந்ததுக்கு அப்புறம் தான் நடந்துச்சு. இன்னைக்கு நான் நல்ல சாப்பிட்டு இருக்கேன் அப்படின்னா அதுக்கு காரணம் இயக்குனர் பாண்டிராஜ் தான். அவர்தான் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்தார். நான் பெருசா எதுவும் படிக்கல. பத்தாம் ஆம் வகுப்பு தான் படிச்சிருக்கேன். என்னைக்குமே பாண்டியராஜன் சாருக்கும் அவரோட குடும்பத்திற்கும் கடமைப்பட்டிருக்கேன் என கூறியுள்ளார்.