‘இதை எங்ககிட்ட இருந்து சுத்தமா மறைச்சிட்டாரு முன்னாடியே சொல்லியிருந்தா’… மறைந்த நடிகர் மாரிமுத்து குறித்து கோபமாக பேசிய நடிகை சத்யப்ரியா…

By Begam

Published on:

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சத்யபிரியா. இவர் அந்த காலகட்டத்தில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திரையுலகில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து அசத்தியவர். இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

இந்த சீரியல் குடும்பத்தில் பெண்களை அடக்கும் ஆணாதிக்கம் பிடித்த ஆண்களின் கதையை தோல் உரித்து காட்டுகிறது. மேலும் இந்த சீரியலில் குடும்பத்து பெண்கள் அவர்களை எதிர்த்து போராடியும் வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சூப்பர் ஹிட் சீரியல் தொடர்ந்து டிஆர்பியில்  முன்னணி இடத்தைப் பிடித்து வருகிறது. இயக்குனர் திருச்செல்வம் தான் இந்த சீரியலையும் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சத்யபிரியா.

இந்த சீரியலில் அதி குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு சமீபத்தில் மரணமடைந்தார். இவரின் மறைவிலிருந்து தற்பொழுது வரை ரசிகர்கள் மீண்டு வரவில்லை. இந்நிலையில் அவரது மரணம் குறைத்து நடிகை சத்யப்ரியா அளித்திருக்கும் போட்டியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் அவர், நடிகர் மாரிமுத்துவுக்கு இருதயம் சம்மந்தபட்ட பிரச்சனை இருப்பது தங்களுக்கு இதுவரை தெரியாது என்றும், முன்கூட்டியே தெரிந்திருந்தால் கமலேஷ் அவரை கண்டிப்பாக தனியே செல்ல விட்டிருக்க மாட்டார். சீரியல், திரைப்படம் என பிசியாக இருந்ததால் அவர் தன்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை என்றும் உருக்கமாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)