நடிப்பில் அசத்தும் அம்மா, படிப்பில் அசத்தும் மகள்.. நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் இந்த படிப்பு படிச்சுருக்காங்களா..?

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் கமல் நடிப்பில் வெளியான நாயகன் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர். நாயகன், அஞ்சலி என பல ஹிட் படங்களில் நடித்த சரண்யா தற்போது அனைத்து படங்களிலும் நடித்த கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார்.

   

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கியுள்ளார் சரண்யா பொன்வண்ணன். எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக, மகளிர் மட்டும், ஒருகல் ஒருகண்ணாடி, கொடி என பல படங்களில் அம்மாவாக நடித்து தன் அபார திறமையை நிரூபித்துள்ளார் சரண்யா. இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான பிரியதர்ஷினிக்கு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்தது .  இவருடைய மகள் பிரியதர்ஷினி சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார்.  இன்னும் இவருடைய இரண்டாவது மகள் சாந்தினிக்கு சைன்டிஸ்ட்டாக வேண்டும்  என்ற ஆசை உள்ளதாம். நடிகை சரண்யா விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்துள்ளார் சரண்யா.

படங்களில் நடித்துக்கொண்டே இந்த பேஷன் டிசைனிங் ஸ்கூலில் 300 பேருக்கு பேஷன் டிசைனிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லி கொடுத்து வருகிறார். தற்பொழுது அவர் மிகப்பெரிய அளவில் இதற்காக நிறுவனம் ஒன்றையும் சமீபத்தில் தொடங்கினார். தற்பொழுது இவரின் மூத்த மகளான பிரியதர்ஷினி டாக்டர் படிப்பு முடித்து டிகிரியும் வாங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.