தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அஜித் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அதில், தமிழ் சினிமாவுல அழகுனா அழகு அப்படி ஒரு அழகு அஜித் மட்டும் தான். அவர் செம கலர். வெள்ளக்கார மாதிரி இருப்பாரு. நம்ம ஊர்ல வெள்ளைக்காரனு அவர மட்டும் தான் நம்ம கையை நீட்டி காட்ட முடியும். அப்படிப்பட்ட அவரு ரொம்ப ஸ்வீட். அவ்வளவு அமைதியா இருப்பாரு. படப்பிடிப்பில் கூட ஏதாவது ஒரு நல்ல டயலாக் இருந்தால் இதை நீங்கள் சொன்னால் தான் நல்லா இருக்கும் என்று நம்மிடம் கொடுத்து விடுவார்.

இதெல்லாம் ஒரு டாப் ஹீரோ செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவர் அப்படித்தான் செய்வார். அதனால அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும். தங்கத்துலையும் தங்கம். குழந்தைக்கு குழந்தை மாதிரி நடந்து பாரு. சமையலில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. கடவுள் மாதிரி ஒரு ஆள் தான் அஜித் என்று அஜித் பற்றி சரண்யா பொன்வண்ணன் புகழ்ந்து பேசி உள்ளார்.
