Connect with us

CINEMA

“என்னால வீட்ல இருந்து வெளியே வர முடியல”.. அதனால ரொம்ப கஷ்டப்பட்டேன்… நடிகை சமீரா ரெட்டி உருக்கம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சமீரா ரெட்டி. பல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி.

Actor Kamal Haasan

   

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எந்த படங்களும் அந்த அளவிற்கு ரிச் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நடிகர் அஜித்துடன் நடித்த அசல் திரைப்படம் உட்பட எந்த படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் பான் இந்தியன் நடிகையாக வலம் வந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Actor Kamal Haasan

இந்நிலையில் சமீரா ரெட்டி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில கஷ்டமான விஷயங்கள் பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில், எனக்கு முதல் குழந்தை பிறந்த பிறகு மிகவும் குண்டாக இருந்தேன். அதனைப் பார்த்து என்னை பலரும் விமர்சித்த நிலையில் காய்கறி விற்பவர் கூட மிகவும் மோசமாக பேசினார். அப்போது நான் வீட்டை விட்டு வெளியில் கூட வரமாட்டேன். பத்திரிக்கையாளர்கள் யாரையும் போட்டோ எடுக்க விட மாட்டேன். அந்த அளவிற்கு இந்த சமூகம் எனக்கு மோசமான அனுபவத்தை என் வாழ்க்கையில் கொடுத்தது என்று சோகமான சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top