23 வயதில் திருமணம் 30 வயதிற்குள் 2 குழந்தைகள் என ஆசைப்பட்ட சாய்பல்லவி.. ஆனால், 31 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்..?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை சாய் பல்லவி; இவர்  23 வயதில் திருமணம் செய்து கொள்ள ஆசை பட்ட நிலையில் அந்த ஆசை ஏன் நிறைவேறாமல் போனது பற்றி பழைய பேட்டியில் அவர் கூறியுள்ள தகவல் தற்போது அவரது தங்கை பூஜா கண்ணனின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் அந்த பேட்டியை பற்றி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

நடிகை சாய் பல்லவி, திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு முன்பே, தன்னுடைய தங்கையின் காதலுக்கு பச்சை கொடி காட்டி, திருமண நிச்சயதார்தத்தையும் அமோகமாக நடத்தி வைத்து விட்டார். சமீபத்தில் இவரின் தங்கை, பூஜா கண்ணனின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

மேலும், கூடிய விரைவில் பூஜா கண்ணனின் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்கள் பலரின் கேள்வியாக இருப்பது ஏன்.? சாய் பல்லவி தன்னுடைய திருமணத்தை தள்ளி போடுகிறார் என்பது தான்.

சாய் பல்லவி தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம், பீக்கில் இருக்கும் இவரது சினிமா கேரியர் தான் என கூறப்படுகிறது. தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ‘டாண்டல்’ படத்தில் நடிக்கும் சாய்பல்லவி, தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK 21 படத்தில் நடித்து வருகிறார்.  ஹிந்தியிலும், இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தன்னுடைய 31 வயது வரை, திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை சாய் பல்லவி  தன்னுடைய 23 வயதில் திருமணம் செய்து கொண்டு, 30 வயதிற்குள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என நினைத்தவர் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான்  உண்மை. இந்த தகவலை அவரே தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் இவர் அறிமுகமான போது பல தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ​​சாய் பல்லவியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு மிகவும் துணிச்சலாக, தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ‘எனக்கு 18 வயது இருக்கும் போது, ​​23 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.  30 வயதிற்குள் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
எம்.பி.பி.எஸ் படிக்கும் போது கூட ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பின்னர் அந்த முடிவுகளை மாற்றினேன். எங்கள் வீட்டில் சில முக்கியப் பொறுப்புகளை ஏற்க வேண்டி இருந்ததால், திருமணத்தை தள்ளி வைத்தேன். பின்னர் ஒரு நடிகையாக நல்ல பெயர் கிடைத்ததால், திருமணத்துக்கு கால அவகாசம் நீட்டினேன்’. என திருமணம் தள்ளி போனதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய கணவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி, அனைத்து பெண்களை மதிக்க வேண்டும்,  கொஞ்சம் குழந்தைத்தனமான மனநிலையில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று பேட்டியில்  தெரிவித்தார்.
Mahalakshmi

Share
Published by
Mahalakshmi

Recent Posts

தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…

2 minutes ago

வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…

14 minutes ago

தவெக vs திமுக: முதல்வரின் முதல் பயணத்திற்கே வந்த சோதனை… கரூருக்கு கிளம்பும் முன்பே விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை… புதிய பரபரப்பை கிளப்பிய திமுக….!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…

21 minutes ago

CM விஜய் தேர்ந்தெடுத்த ‘புது வழி’…. அமைச்சர்களுக்குப் போட்ட ரகசிய உத்தரவு… டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்….!

மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…

27 minutes ago

“பழிக்கு பழி… டிரம்பை கொல்வது எங்கள் பொறுப்பு”… கமேனியின் இறுதிச்சடங்கில் நடுங்க வைத்த சிவப்பு கொடிகள்…. பதறும் உலக நாடுகள்..!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…

34 minutes ago

“6 நாட்களாக எங்கே போனார் செந்தில் பாலாஜி?”…. லுக் அவுட் நோட்டீஸ் பின்னணியில் இருக்கும் தமிழக அரசியல் பூகம்பம்…. அர்ஜுன் சம்பத் உடைத்த அதிரடி உண்மை….!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

45 minutes ago