#image_title
மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் சாய் பல்லவி.
பிரேமம் என்ற ஒரே படத்தில் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார் சாய் பல்லவி. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமானார் சாய் பல்லவி.
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் சாய் பல்லவி. அதன்பின்னர் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் கதாநாயகியாக நடித்தார் சாய் பல்லவி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் விராத பர்வம் மற்றும் கார்க்கி திரைப்படம் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து தற்பொழுது ற்போது சிவகார்த்திகேயனின் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கில் நாகசைதன்யா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சாய் பல்லவி. இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார். அவரின் பெயர் பூஜா கண்ணன்.
இவரும் தற்பொழுது நடிகையாக களமிறங்கி கலக்கி வருகிறார். இந்நிலையில் பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் திருமணம் என்றும் கூறப்படுகிறது.
தற்பொழுது தங்கை நிச்சயத்துக்கு ரெடியாகும் வீடியோ ஒன்றை சாய் பல்லவி வெளியிட அந்த விடியோவும், நிச்சயதார்த்த புகைப்படங்களும் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…