அன்று விஜய் கேட்ட கேள்வி…! 12 வருடமாக மனதில் வைத்திருந்த நடிகை ரோஜா… அவரே சொன்ன ரகசியம்….!!

By Devi Ramu on ஆடி 17, 2026

Spread the love

முன்னணி கதாநாயகியாகத் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகை வலம் வந்த நடிகை ரோஜா, அரசியல் பணிகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தனது கம்பேக் படமான ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் விளம்பரப் பேட்டியில் பங்கேற்ற அவர், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்த ‘காவலன்’ திரைப்படத்தில் நடிகை அசினுக்குத் தாயாக நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அப்போது படப்பிடிப்புத் தளத்தில் தன்னைச் சந்தித்த விஜய், நீங்க அம்மாவா நடிக்கிறீங்களா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு முன்னணி நாயகனே வியந்து கேட்ட அந்தக் கேள்வி, தவறான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்துவிட்டோமோ என்ற யோசனையைத் தமக்குள் ஏற்படுத்தியதாக ரோஜா தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே அதன் பிறகு தாய்ப் பாத்திரங்களில் நடிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மீண்டும் ‘லெனின் பாண்டியன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரோஜா, நல்ல கதையம்சம் உள்ள வேடங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.