ஆபாச படத்தில் நடித்தேனா நான்..? என்னை சித்திரவதை செய்கிறார்கள்.. கண்ணீர் விட்டு கதறிய நடிகை ரோஜா..!!

By Priya Ram

Published on:

ஆந்திர மாநிலம் திருப்பதியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரோஜா கடந்த 1998-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அந்த கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருந்த ரோஜா நகரி மற்றும் சந்திரகிரி சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை ரோஜா ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஒய் எஸ் ஆர் மறைந்த பிறகு தனி கட்சி தொடங்கிய ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் ரோஜா இணைந்தார். அதன் பிறகு 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சராக இருக்கிறார்.

   

இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவரான பண்டாரோ சத்திய நாராயணமூர்த்தி நடிகை ரோஜா ஆபாச படங்களில் நடித்ததாக பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகை ரோஜா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது ரோஜா கூறியதாவது, தெலுங்கு தேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டு பொருளாக பார்க்கின்றனர். உங்கள் வீட்டுப் பெண்களை இப்படி அவதூறாக பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா என கண்ணீர் விட்டு அழுதார்.

இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி தன்னை சித்திரவதை செய்வதாகவும், அது போன்ற படத்தில் நடித்தவள் என்றால் சந்திரபாபு நாயுடு ஏன் என்னை தெலுங்கு தேசம் கட்சியில் சேர்த்தார் என ரோஜா கேள்வி எழுப்பினார். தன்னை அவதூறாக பேசும் தெலுங்கு தேசம் கட்சியினரை சந்திரபாபு நாயுடுவும் அவரது மகனும் கண்டிக்காதது ஏன்? தன்னைப் பற்றி பேசும் தெலுங்கு கட்சியின் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக ரோஜா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Priya Ram