கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வீதிவீதியாக சென்று ஏழை மக்களுக்கு பரிசளித்த நடிகை ரோஜா.. நெகிழ்ந்துபோன மாற்றுத்திறனாளி குடும்பம்.. வீடியோ..

By Begam

Updated on:

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. நடிகை ரோஜா இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரோஜா, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

   

இதனைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா 2014 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு அவர் இரண்டு முறை எம்எல்ஏ தேர்தலில் ஜெயித்து தற்போது சுற்றுலா துறை அமைச்சராக ஆந்திர அரசியலில் கலக்கி வருகிறார். சமீபத்தில் கூட நடிகை ரோஜாவை அமைச்சர் ஒருவர் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இப்படி தன் அரசியல் வாழ்க்கையில் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

நடிகை ரோஜா எப்பொழுதும் பொதுமக்கள் நலனிலும் அக்கறை கொண்டவர். தற்பொழுது இவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு சென்று, பரிசுகளை கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார். அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்த அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அமைச்சர் ரோஜாவின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…