தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை ரேவதி. கேரளாவில் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்வசம் கட்டிப்போட்டவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் முதன்முதலில் மண்வாசனை என்ற திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவரை சினிமாவிற்கு இயக்குனர் பாரதிராஜா தான் அறிமுகம் செய்து வைத்தார். தமிழில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாத நடிகை என்று பெயர் எடுத்தவர் ரேவதி. தமிழில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற இடத்தையும் இவர் பிடித்து விட்டார். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு குண சித்ரா வேடங்களில் அடிக்கடி நடித்து வந்த ரேவதி வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். தனக்கென ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய ரேவதி தன்னுடைய 47 வயதில் டெஸ்ட் டியூப் மூலமாக அழகிய மகள் ஒருவரை பெற்றெடுத்தார்.
அந்தக் குழந்தையின் பெயர் மகி. தனது குழந்தைக்காகவே ரேவதி வாழ்ந்து வருகின்றார். தற்போது ரேவதியின் மகளுக்கு 11 வயதாகும் நிலையில் ரேவதி தன்னுடைய மகளை கேமரா முன்பு கொண்டு வராமல் பொத்தி பொத்தி பார்த்து வளர்த்து வருகின்றார். தற்போது ரேவதி மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…