#image_title
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் சமூகப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் ரெஜினா. அந்த வகையில் தற்போது கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புடவையில் தூய்மை பணியில் ஈடுபட்டதோடு நேற்று நடந்த நிகழ்வில் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றார், இதற்காக அவர் எஸ்யுபி என்ற மெரினா கிளபுடன் சேர்ந்து இந்த பணியை செய்து வருகின்றார். இது குறித்து பேசிய அவர் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு ஏறுதல் செய்யும் பணி.
இதற்காக மெரினாக்களப்பை சேர்ந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன். எனக்கு இந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது 12 வயதான சிறுவன் அனீஸ் தான். இந்த குழுவை வழிநடத்தும் அனீஸ் என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார். மேலும் கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றி விடக்கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.
சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர்நிலைகள் நமக்கு மிகவும் முக்கியமானவை. அதை களங்கடிக்க கூடாது. இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்து இந்த குழுவினரோடு இணைந்து இதனை செய்தேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…