#image_title
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல் ரெப்ரசனேட்டிவாக இருந்தார். இதைத் தொடர்ந்து சினிமாவுக்குள் நுழைந்து இவர் ஆடியோ கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது பாரதிராஜா, இளையராஜா இளையராஜா உடன் நட்பு ஏற்பட்டது.
பின்னர் மூன்று பேரும் இணைந்து ராஜாஸ் சினி கம்பெனி என்ற நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை விநியோகம் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து தியாகராஜனை பாரதிராஜா நடிகராகவும் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் புகழ் அடைந்த தியாகராஜன் மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதன்முதலாக பூவுக்குள் பூகம்பம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் அவர் இயக்குனராக அறிமுகமானது எப்படி என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.
பூவுக்குள் பூகம்பம் என்ற திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆர்மி சம்பந்தப்பட்ட கதை. அந்த படத்திற்கு செல்லும்போது வேறு ஒரு இயக்குனரை அழைத்துக் கொண்டு சென்று ஹிந்தி இங்கிலீஷ் அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது மிகவும் கஷ்டமாகவும் இருந்தது. இதனால் அப்படத்தை நானே இயக்க முடிவு செய்து அந்த படத்தை இயக்கினேன். இப்படி தான் எனது இயக்குனர் பயணம் தொடங்கியது என்று பகிர்ந்து இருந்தார்.
நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.…
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில், பழுதடைந்த தண்ணீர் தொட்டியின் உச்சியில் 15 மணி நேரம் உயிருக்காகப் போராடிய இரண்டு சிறுவர்களை…
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…