ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.

அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.

இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார்.

இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் யோகா பயிற்சியாளர் லவல் தவான் என்பவரை காதலித்து வருவதாகவும் அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

தனது காதலரின் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில் நேற்று ஷிகேஷில் ஷிவ்புரி கங்கை நதிக்கரையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் ரிஷிகேஷில் நடைபெற்றாலும் வரும் நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு முன்பு நடந்த சடங்குகள் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

