Connect with us

CINEMA

திருப்பதி கோவிலுக்கு மகனுடன் சென்று.. சாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா கிருஷ்ணன்… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார். காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும்.

   

பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள். ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி. 35 வயதிலும் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 50 வயதைக் கடந்தும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘படையப்பா’ திரைப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் ரஜினியுடன் இவர் மீண்டும் ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கிருஷ்ணவம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்பொழுது நடிகர் ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் இணைந்து தென்காசியில் உள்ள திருமலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top