தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இன்றும் உள்ளது. தொடை அழகி ரம்பா என்று அனைவரும் அழைப்பார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர். இந்த நிலையில் சினிமாவில் பிஸியாக இருந்த சமயத்தில் கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பா திருமணத்திற்கு பிறகு கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.
அதன் பிறகு இவர் சினிமா பக்கம் தலை காட்டவில்லை. ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக சினிமாவிலிருந்து ரம்பா ஒதுங்கி இருக்கின்றார். இந்த நிலையில் ரம்பாவின் கணவர் இந்திரன் பத்மநாதன் சென்னையில் மேஜிக் ஹோம் நிறுவனத்தின் கிளையை நடத்தி வருகின்றார். மேலும் யாழ்ப்பாணத்தில் NorthernUni மற்றும் SLIIT என்ற நிறுவனமும் உள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல உதவிகளை செய்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எங்கள் நிறுவனம் மூலம் பல குழந்தைகளுக்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம். பணத்துக்கு பணம் சம்பாதிச்சு புரோஜனம் இல்ல, அத வச்சு என்ன பண்றோம்னு தான் முக்கியம், பிறந்த ஊர் பள்ளி குழந்தைகளுக்கு கொடுப்பதுதான் சிறந்தது என என் மனைவி வாழ்த்தி அனுப்புனாங்க. பிள்ளைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்க உங்க வேலையை பாருங்க என்று கூறி அனுப்பி வைத்தார். இன்றும் பல குழந்தைகளுக்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம் என்று நடிகை ரம்பாவின் கணவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…