படகை ஓட்டும் கணவர்… குழந்தைகளுடன் நடுக்கடலில் ஜாலியாக என்ஜாய் செய்யும் நடிகை ரம்பா… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, போஜ்பூரி என்று பல மொழி சினிமாக்களில் நடித்தவர் நடிகை ரம்பா. தமிழ் சினிமாவில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துள்ளார். துடிப்பான இவருடைய நடிப்பு மற்றும் அழகிற்காக ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தார்.

   

இந்நிலையில் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை 2010 இல் திருமணம் செய்துகொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்துவந்தார். தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நடிகை ரம்பாவிற்கு லான்யா, சாஷா, ஷிவின் என்று 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர் அவ்வபோது தனது இணையதள பக்கத்தில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை  பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் இவர் தனது  தனது மூத்த மகள் லான்யாவின் புகைப்படத்தை பதிவிட, இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அச்சு அசலா நடிகை ரம்பா மாதிரியே இருப்பதாக கமெண்ட் செய்து வந்தனர்.

தற்பொழுது நடிகை ரம்பா தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் ஜாலியாக அவுட்டிங் சென்றுள்ளார். நடுக்கடலில் நடிகை ரம்பாவின் கணவர் படகை ஓட்ட அவரும் அவரது குழந்தைகளும் என்ஜாய் செய்யும் வீடியோ ஒன்றை நடிகை ரம்பா தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Rambha???? (@rambhaindran_)