‘பாக்கியலட்சுமி’ சீரியல் ராஜலட்சுமி ஒரு பிரபல நடிகையா?… வைரலாகும் புகைப்படம் உள்ளே…

By Samrin

Updated on:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’ இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை  பெற்றுள்ளது.

   

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் பாக்யா மாமியாராக நடிப்பவர்  நடிகை ராஜலட்சுமி.

இவர் ஆந்திராவை  பூர்வீகமாக  கொண்டவர்.  தனது குழந்தை பருவத்திலேயே நாடகக் குழுவில் இருந்து  தனது தாயுடன் சிறிய நாடகங்களில் நடித்துள்ளார்.

1980 ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’ என்ற படத்தில் ‘சாரதா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் மிக  பிரபலமானார்.அதன்பின் சங்கராபரணம் ராஜ்யலட்சுமி என்று மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

இதை தொடர்ந்து 1980ஆம் ஆண்டு  வெளியான ‘சுஜாதா’ என்ற படத்தின் மூலம்  தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

1981 ஆம் ஆண்டு  வெளியான ‘கோடீஸ்வரன் மகள்’என்ற படத்தின் மூலமாக் மக்கள் மத்தியில் மிகுந்த   வரவேற்பு பெற்றார்.

தமிழில் மூன்று முகம், அதிசய பிறவிகள், அர்ச்சனைப் பூக்கள், கருடா சௌக்கியமா, நலந்தானா, இமைகள்,

நாணயம் இல்லா நாணயம், தேன் கூடு, கடிவாளம், மீண்டும் பல்லவி போன்ற  திரைப்படங்களில் நடித்துள்ளார் .

இவர்  என். டி. ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, சங்கர், மோகன்லால், திலீப்,

ஜிதேந்திரா, மம்முட்டி, விஷ்ணுவர்தன் போன்ற பல முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார்.

இவர் தமிழ்  தெலுங்கு, கன்னடம், மலையாள பல மொழி படங்களில்  நடித்துள்ளார் . நடிகை ராஜ்யலட்சுமி  கே. ஆர். கிருஷ்ணன் என்பவரை   1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் சில ஆண்டுகள் சினிமாவில்  இருந்து விலகி சிங்கப்பூரில் தனது குடும்பத்தை கவனித்து வந்தார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2003ல் வெளியான ‘பரசுராம்’ படத்தின் மூலம்  ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை ராஜ்யலட்சுமி.

இதை தொடர்ந்து டிரீம், பிரியசகி, திருப்பாச்சியில் விஜய் அம்மா, வரலாறு படத்தில் அஜித் அம்மா, எம்டன், திருப்பதி,

சாது மிரண்டா, தனம், யாரடி நீ மோகினி, பிரிவோம் சந்திப்போம், குட்டி, உத்தம புத்திரன், சைவம், காலக்கூத்து என்ற படங்களில் நடித்தார்.

இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு அம்மா ரோலில் நடித்தார்.இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சின்னத்திரையையும் விடுவதாக இல்லை. 1991ல் தூர்தர்ஷனில் வெளியான ‘பெண்’ என்ற தொடரில் நடித்தார்.

அதன் பின்னர் சன்டிவியில் ஒளிபரப்பான மேகலா, பிள்ளை நிலா, கண்மணியே போன்ற சீரியல்களில் நடித்தார்.

சன்டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் சத்யாவின் அம்மாவாக சம்பூர்ணம் சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள்  மனதில்  நீங்கா இடம்பிடித்தார்.

தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வந்தார். மீண்டும் இவருக்கு ஹிட் கொடுத்தது சீரியல் என்றால்  அது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி ‘சீரியல்தான்.

தற்போது சன்டிவியின் ‘அன்பே வா’ சீரியலிலும் நாயகன் வருணின் பாட்டியாக நடித்து வருகிறார்.இவர் திரைத்துறையில் கிட்டதட்ட 41 வருடங்கள் பயணம் செய்துள்ளார்.

தற்போது இவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.