தென்னிந்திய சினிமாவில் 1980 களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ராதா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.
இவர் நடிக்க வந்த ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்ததுடன் 10 வருடங்களில் 162 படங்களில் நடித்து மாபெரும் சாதனை படைத்தவர்.
இந்த சாதனை இந்திய அளவில் எந்த ஒரு நடிகையும் இதுவரை செய்திடாத சாதனையாகும். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் என அனைவரிடமும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்படி பிசியான நடிகையாக சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு பிசினஸ் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.
அதன் பிறகு சினிமாவை ஓரம் கட்டி எந்த ஒரு படத்திலும் நடிக்க வரவில்லை. சமீபகாலமாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி கார்த்திகா, துளசி மற்றும் விக்னேஷ் என்ற இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களில் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அவரின் மகன் விக்னேஷ் இதுவரை சினிமா பக்கமே வரவில்லை.
இதனிடையே ராதாவின் மகள் நடிகை கார்த்திகா அவர்கள் சமீபத்தில் கேரளாவில் சிறந்த தொழில் அதிபர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சினிமாவில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் சுயமாக தொழில் செய்து வரும் இவருக்கு கேரள அரசு சிறந்த பெண் தொழில் அதிபர் விருது வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில் நடிகை ராதாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…