![radha4 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/10/radha4.jpg)
CINEMA
‘நீ எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு’… மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை ராதா…
தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. அதன்பின் கமல் ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் நடித்தார். சுமார் 10 வருடங்களாக கனவு கன்னியாக நீடித்தார்.இவர் 1991ல் ஹோட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இரண்டு மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்து அளவிற்க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. நடிகை கார்த்திகா நாயர் கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
அதன் பிறகு தொடர் தோல்விகள் கண்டதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சுருங்கியது. ஒரு கட்டத்தில் சீரியல் தொடர்களிலும் தன்னை வெளிக்காட்டினார். இந்நிலையில் கார்த்திகா கடந்த சில வருடங்களாக தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
சமீபத்தில் இதனை கார்த்திகா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகை ராதா தன்னுடைய மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது இப்பதிவினை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
View this post on Instagram