வெறும் 6 லட்சத்திற்காக.. 100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழக்கப்போகும் அம்பிகா – ராதா சகோதரிகள்.. நடந்தது என்ன..?

By Nanthini

Updated on:

தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகைகளாக கொடி கட்டி பறந்தவர்கள் தான் ராதா மற்றும் அம்பிகா. இவர்கள் இருவருமே உடன் பிறந்த சகோதரிகள். இவர்கள் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இருவரும் ஒன்றாக இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரும் தற்போது எந்த ஒரு திரைப்படத்திலும் நடிப்பதில்லை. சில சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

   

இதனிடையே சமீபத்தில் ராதாவின் மகள் கார்த்திகாவிற்கு மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. சுமார் 200 சவரன் தங்க நகைகளை அவருக்கு அணிவித்து பிரபலங்கள் பலரும் சூழ திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அம்பிகா மற்றும் ராதாவுக்கு சொந்தமான ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டூடியோவில் எந்தவிதமான படப்பிடிப்புகளையும் நடத்துவதற்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய வர்த்தக சபையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத் என்பவர் அம்பிகா மற்றும் ராதாவின் தம்பி அர்ஜுன் என்பவருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அதில் 19 லட்சத்தை அவர் திருப்பி வாங்கி விட்ட நிலையில் இன்னும் 6 லட்சம் ரூபாய் வாங்க வேண்டி உள்ளது. அதனைக் கேட்டு பெறுவதற்கு பலமுறை பேச்சுவார்த்தை நடந்த போதும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த 6 லட்சம் ரூபாயை தராமல் அர்ஜூன் இழுத்தடித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் தெரிவித்த நிலையில் ஏ ஆர் எஸ் ஸ்டூடியோவில் படப்பிடிப்புகளை நடத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் உள்ளதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Nanthini