Connect with us

நான் நினைச்ச மாதிரியே என் பாய் ஃப்ரெண்ட் என்னை ஏமாத்திட்டான்.. மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்..!

CINEMA

நான் நினைச்ச மாதிரியே என் பாய் ஃப்ரெண்ட் என்னை ஏமாத்திட்டான்.. மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்..!

 

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். 33 வயதாகும் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

அதைத் தொடர்ந்து என் மனசு தங்கம், டிக் டிக் டிக் , திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களின் நடித்திருக்கின்றார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் இவர் நடித்த பருகு எனும் வெப் சீரியஸ் ஒடிடி தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் பேசக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது சினிமாவில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஓடிடி வெப் சீரியஸ்களில் நடித்து வருகின்றார். மிக திறமையான நடிகையாக இருந்தாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையை சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் நிவேதா பெத்துராஜ் பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது நெகட்டிவ்வாக நான் எதையாவது நினைத்தால், அது அப்படியே நடந்து விடுகிறது. என்னுடைய பாய் பிரண்டு என்னை ஏமாற்றி விடுவான். அவன் என்னை ஏமாற்றப் போகிறான், அதுவும் எனக்கு நெருங்கிய உறவின் மூலமாகவே என்று நினைத்தேன். உடனடியாக அதே போல என் பாய் ஃப்ரெண்ட் என்னை ஏமாற்றி விட்டான் என்று கூறியிருந்தார்.

மேலும் தான் இப்போது வைத்திருக்கும் கார் எப்படி இருக்க வேண்டும் என்ன கலரில் இருக்க வேண்டும் என்று எப்போதோ நினைத்தது. அதுமட்டுமில்லாமல் பியூச்சரில் தன்னுடைய கார் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நான் யோசித்து வைத்திருக்கின்றேன் என்று கூறியிருந்தார். இந்த பேட்டி வைரலானதை தொடர்ந்து யார் அந்த பாய் ஃப்ரெண்ட் என்று சோசியல் மீடியாவில் பலரும் தேடத் தொடங்கி இருக்கிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top