Connect with us

CINEMA

சீரியல் நடிகை நித்யா ரவீந்திரனின் மகளை பாத்திருக்கீங்களா?… அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்களே… நீங்களே பாருங்க…

‘குருதிக்குளம்’ என்று மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை நித்யா ரவீந்திரன். தமிழில் இவர் மாரியம்மன், திருவிழா, குடும்பம் ஒரு கதம்பம், சாவித்திரி, உயர்ந்த உள்ளம், அலைபாயுதே, பம்மல் கே சம்பந்தம் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

   

அத்துடன் வாணி ராணி, அபூர்வராகங்கள் ,பிரியசகி , மின்னலே, சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, ராசாத்தி, கண்ணான கண்ணே என பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நம்ம வீட்டுப் பொண்ணு’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் நடிகையாக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை நித்யா ரவீந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கும் இவர் ஹிந்தியில் கூட நடித்துள்ளார்.

கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அட்ராங்கி ரே’ என்ற பாலிவுட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்த இவர், மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

நடிகை நித்யா ரவீந்திரன் ஒரு அரசாங்க ஊழியர். இவர் தனது தந்தையின் டிராமா நிறுவனம் ஒன்றில் நடிகையாக தனது திரை பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் களம் இறங்கினார்.

இவர் 1987இல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை நித்யா ரவிந்தரனின் உண்மையான பெயர் நித்யா சாந்தி என்பதாகும். இவருக்கு அர்ஜுன் என்ற மகனும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை நித்யா ரவீந்திரன் மகளா இவர்? அம்மாவை போலவே இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படம்….

Continue Reading

More in CINEMA

To Top