Connect with us

‘தமிழ் சினிமாவில் அந்த நடிகரால் எனக்கு எப்பவும் பிரச்சனை, தொல்லை’… பகீர் பேட்டியளித்த நடிகை நித்யா மேனன்…!

CINEMA

‘தமிழ் சினிமாவில் அந்த நடிகரால் எனக்கு எப்பவும் பிரச்சனை, தொல்லை’… பகீர் பேட்டியளித்த நடிகை நித்யா மேனன்…!

 

தமிழ் சினிமாவில் ‘180’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி ,24, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து  பிரபலமானார். தளபதி விஜயுடன் ‘மெர்சல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது, தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய ரீஎண்ட்ரி என்று அவரே குறிப்பிட்டு இருந்தார்.

   

நடிகர் தனுஷ் உடன் இவர் இணைந்து நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ‘wonder woman’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதைத்தொடர்ந்து மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அயர்ன் லேடி என்ற படத்தில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் ‘பீம்லா நாயக்’ படத்தில் பவன் ஜோடியாக நடித்தார்.

நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகை நித்யா மேனன் சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நித்யா மேனன் பேசும்போது, ‘தெலுங்கு சினிமாவில் இதுவரை நான் எந்த ஒரு பிரச்சனையையும் சந்தித்தது இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனை சந்தித்தேன். ஒரு படத்தின் படப்பிடிப்பு போது தமிழ் சினிமா நடிகர் என்னை துன்புறுத்தினார் என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் யார் அந்த ஹீரோ கொந்தளித்து வருகின்றனர்.

Continue Reading
To Top