தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நித்யா மேனன். தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், சைக்கோ, காஞ்சனா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். சமீபத்தில் கூட படத்தில் நடித்ததற்காக ஃபிலிம் பேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பழமொழி திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நித்யா மேனன் அவர் எப்படி படத்தை தேர்வு செய்கிறார் என்பதை குறித்து விளக்கமாக கூறியுள்ளார். அதில், நான் தேர்வு செய்யும் கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் பிடிக்க வேண்டும், அதனை அனைவரும் விரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருநாளும் படங்களை நான் தேர்வு செய்தது கிடையாது.

நான் தேர்வு செய்யக்கூடிய கதாபாத்திரம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தால் மட்டுமே போதும். கோடி கோடியாய் கொட்டி பிரம்மாண்ட செலவில் தயாராகும் படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நான் ஏற்று ஒருபோதும் நடிக்க மாட்டேன். அதே சமயம் சிறிய பட்ஜெட் படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் அந்த வாய்ப்பையும் விடமாட்டேன் என்று நித்யா மேனன் ஓபன் ஆக பேசியுள்ளார். இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நித்யா மேனனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
