CINEMA
சீரியல் இனி செட் ஆகாது….! நடிப்புக்கு “Bye Bye”…. புது தொழில் தொடங்கிய நடிகை நீலிமா ராணி…!!
நடிகை நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் நான் மகான் அல்ல என்னும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது நடிகை நீலிமா ராணி சினிமாவை ஓரம் கட்டி விட்டு சென்னையில் உள்ள ஆர்.கே சாலையில் “நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்” என்ற அழகு நிலையத்தை திறந்துள்ளார்.
இதனை பாடகர் பி. சரண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல், சி.கே குமரவேல் ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் நடிகை நீலிமா ராணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரை, வண்ணத்துறை, டிஜிட்டல் துறை உள்ளிட்டவற்றில் தனது தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்த நடிகை புதிதாக நேச்சுரல்ஸ் சிக்னேச்சர் என்ற அளவில் நிலையத்தை தொடங்கியதன் மூலமாக தனது சேவையை இளம்பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.