கணவர் பஹத் பாசிலை மிரட்டிய நடிகை நஸ்ரியா… இதற்காகத்தானா?… பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்…

By Begam

Published on:

‘நேரம்’ திரைப்படம் வரும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நஸ்ரியா. அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி ‘திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நையாண்டி படத்தில் நடித்தார். தொடர்ந்து வாயை மூடி பேசவும் ,திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

   

இதைத் தொடர்ந்து மலையாள முன்னணி இயக்குனர் பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பகத் பாசிலை  2014ல் திருமணம் செய்து கொண்டார் நடிகை நஸ்ரியா. நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்பொழுது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில்  நடிகை நஸ்ரியா தனது கணவரான பகத் வாசலை மிரட்டியதாக செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது நடிகை நஸ்ரியாவின் கணவரான பஹத் வீட்டிற்கு வந்தும் தன் நடித்த கதாபாத்திரங்களையும் மனதில் வைத்து நடந்து கொண்டதாகவும்,

வீட்டிற்குள் வரும் பொழுது செருப்பை  கழட்டி விடுவது போல அந்த கேரக்டரையும் மறந்து விட வேண்டும் இல்லையென்றால் உங்களை மனநல மருத்துவரிடம் கூட்டி சென்று விடுவேன் என்று நஸ்ரியா அவரை மிரட்டியதாகவும், அதனால் அந்த பழக்கத்திலிருந்து பகத் பாசில் விடுபட்டதாகவும்’ சமீபத்திய பேட்டி ஒன்றில்  செய்யாறு பாலு கூறியுள்ளார். தற்பொழுது இந்த பேட்டியானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by YellowBench Tamil (@yellowbenchtamil)