நேத்து அப்படி… இன்னைக்கு இப்படியா..? நயன்தாரா வெளியிட்ட புகைப்படத்தால் மீண்டும் குழப்பத்தில் ரசிகர்கள்….

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின்  ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில்  நடித்து வருகிறார். முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது இவர்கள் தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

   

சமீபத்தில் நயன்தாராவின் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததை நெட்டிசன்கள் கண்டுபிடித்தனர்.  இதையடுத்து விக்னேஷ் சிவனை, நயன்தாரா ‘அன்பாஃலோ’ செய்துவிட்டதாகவும் இருவருக்கும் பிரச்சனை என்றும் வதந்திகள் பரவின. ஆனால், அடுத்து அவரைப் பின் தொடர்ந்து வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் நேற்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் , “umm… I’m lost ” , ‘நான் இழந்துவிட்டேன் ‘ என சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.  இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் மீண்டும் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் மீண்டும் ஏதாவது பிரச்சினையா..? என்று  கேள்வி எழுப்ப தொடங்கினர்.

இப்படி தொடர்ந்து ரசிகர்களை குழப்பி வரும் இவர் இன்று, தனது இன்ஸ்டா ஸ்டோரியில்  தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விமானத்தில் செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன்மூலம் அவர் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை மீண்டும் ரசிகர்களுக்கு வெளிப்படையாக கூறியுள்ளார்.