‘வழக்கு எண் 18/9’ திரைப்பட நடிகை மனிஷா யாதவ் கணவரை பார்த்துள்ளீர்களா?…

By Samrin

Updated on:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்  தான் நடிகை மனிஷா யாதவ்.பெங்களூரை   பூர்விகமாகக் கொண்டவர்.

   

ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். அதன் பின் இயக்குனர் பாலாஜி சக்திவேல்  இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக  தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. விஜய்டிவியில்  விருது சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார்.

அதை தொடர்ந்து  ‘துணிக துணிக’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற திரைப்படத்தில்  நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் தமிழில் ஜன்னல் ஓரம் ,

பட்டிய கிளப்பணும் பாண்டியா ,திரிஷா இல்லனா நயன்தாரா ,போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

2018ஆம் ஆண்டு ‘ஒரு குப்பை கதை’படத்தில் நடித்தார்.இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ‘சண்டி முனி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ இரண்டாம் பக்கத்தில் ஒரு பாடலுக்கு மட்டும்  நடனம் ஆடினார்.

பட வாய்ப்பு குறைந்த நிலையில் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்  தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை மனிஷா யாதவ் தொழிலதிபரான வர்னித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வருகிறது.