![marm - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/marm.jpg)
CINEMA
ரஜினிகாந்த் படத்தில் நான் நடிச்சிருக்கவே கூடாது… ஓபன் ஆக பேசிய மகாராஜா பட நடிகை..!!
பிரபல நடிகையான மம்தா மோகன்தாஸ் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மம்தா தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திலும் மம்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் குசேலன் படத்தில் நடித்த போது தனக்கும் நயன்தாராவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்து ஏற்கனவே மம்தா பேசினார். மகாராஜா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, குசேலன் படத்தில் நயன்தாராவுக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடையாது. முதல் நாள் ஏதோ சரி இல்லாதது போல எனக்கு தோன்றியது. இரண்டு நாட்கள் மட்டும் ஷூட்டிங் சென்றேன் ஆனால் ரஜினியுடன் நான் இணைந்து நடனமாடிய காட்சியை அப்படியே பாடலில் இருந்து நீக்கிவிட்டனர்.
ஒரு செகண்ட் மட்டும் தான் அந்த பாடலில் ஆடுவது போல கொண்டு வந்தனர். அதனை பார்த்ததும் நான் ஏன் குசேலன் படத்தில் நடித்தேன் என தோன்றியது. ரஜினியுடன் நடனமாட வாய்ப்பு கிடைக்கிறது என்ற மகிழ்ச்சியில் அங்கு சென்றேன். ஆனால் நான் ரஜினியுடன் சேர்ந்து நடனமாடிய காட்சிகளை அப்படியே நீக்கிவிட்டனர். அது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது எனக் கூறியுள்ளார். மேலும் எனக்கு தயாரிப்பாளர் செலவு செய்யும் பணத்தின் மதிப்பு தெரியும்.
ஒரு சிலர் பெரிய ஆர்டிஸ்ட் ஆக காட்டிக் கொள்வதற்காக நிறைய அசிஸ்டன்ட்களை வைத்துக் கொள்கின்றனர். அதெல்லாம் தேவையில்லாதது. நான் இரண்டு அசிஸ்டன்ட் மட்டுமே வைத்துள்ளேன். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை மக்கள் தான் கொடுக்க வேண்டும். ஆனால் சிலர் பி ஆர் டீமிடம் கூறி பத்து பேப்பர்களில் சூப்பர் ஸ்டார் என எழுத வைக்கின்றனர் என நடிகை நயன்தாராவை மறைமுகமாக மம்தா விமர்சனம் செய்துள்ளார்.