தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.
இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகின்றார். இந்நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் திரைத்துறையில் நுழைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன்.
500 கோடி ரூபாய் வசூலிக்கும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அந்த திரைப்படத்தில் நான் நடிக்க போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். எனவே இனி படங்களை தேர்வு செய்து தான் நடிக்க போகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…