திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரை சேர்ந்த இளம் பெண் ரிதன்யா திருமணமான இரண்டு மாதத்தில் வரதட்சணை கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஏற்கனவே கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மாமியார் சித்ரா தேவியும் கைது செய்யப்பட்டார். ரதன்யாவின் இந்த தற்கொலை முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இவருடைய மரணத்திற்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் பிரபல நடிகையான லிஜோமோல் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து பேசி உள்ளார்.
அதில், நான் மலையாளத்தை சேர்ந்தவள் என்பதால் எங்க ஊரில் இதை சீதனம் என்று சொல்லுவாங்க. பொதுவா யாராவது வரதட்சணை கேட்டா அப்படி ஒரு கல்யாணமே வேண்டாம் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு முதலில் பெண்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வளவு பணம் நகை வேண்டுமென்று யாராவது திருமணத்திற்கு முன்பு கேட்டால் அந்த திருமணத்தை நிராகரிப்பது தான் நல்லது. அதற்கு பெண்கள் ரெடியா இருக்க வேண்டும். அவர்களுக்கு துணையாக பெற்றோர்களும் இருந்தால்தான் அது சாத்தியமாகும். அது நாம்ப காதலிக்கும் பையனா இருந்தாலும் அப்படி ஏதாவது கண்டிஷன் போட்டா அந்த கல்யாணத்தை நிராகரித்து விடுவது தான் நமக்கு நல்லது என்று லிஜோமோல் அந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…