சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கோவை சரளா கூறியதாவது, சதிலீலாவதி என்ற படத்தில் கமலுக்கு நான் ஜோடியாக நடிக்க வேண்டாம் என்று டைரக்டர் பாலுமகேந்திரா மறுத்திருக்கிறார். நீங்கள் எவ்வளவு பெரிய ஹீரோ? காமெடி நடிகை சரளாவை ஜோடியாக போட சொல்கிறீர்களே என்று கமலிடம் கேட்டிருக்கிறார். இந்த கேரக்டருக்கு அவர்தான் வேண்டும் என்று கமல் உறுதியாக சொல்லி இருக்கிறார். இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒரு மாதம் வரை இருவரும் பேசாமல் இருந்திருக்கின்றனர்.
அதன் பிறகு அவர்தான் ஹீரோ, படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். நாம் ஏன் இதற்கு தடை சொல்ல வேண்டும் என்று கருதிய இயக்குனர் பாலு மகேந்திரா, உங்கள் விருப்பம் போல கோவை சரளாவே இதில் அந்த கேரக்டரில் நடிக்கட்டும் என்று கூறியிருக்கிறார். பிறகு படம் வெளியான பிறகு கமல் சொன்னதுதான் கரெக்ட். இந்த கேரக்டர் நீங்க தான் பண்ணனும். நான்தான் உங்களை தவறாக புரிந்து விட்டேன் ஸாரிம்மா என்று என்னிடம் பாலுமகேந்திராவே சொன்னார் என்று நடிகை கோவை சரளா அதில் கூறியிருக்கிறார்.
