கல்யாணம் முடிந்த கையோடு தேனிலவு சென்ற நடிகை கார்த்திகா நாயர்.. எங்க உங்க கணவரை காணோம்..? வைரலாகும் புகைப்படங்கள்…

By Begam

Published on:

80’ஸ் 90’ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராதா. ஆனால் இவரைப்போல இவரது மகள்களால் திரையுலகில் சாதிக்க முடியவில்லை என்றே கூறலாம்.

   

1991ல் ஹோட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இரண்டு மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும்  நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்து அளவிற்க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

நடிகை கார்த்திகா நாயர் கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு தொடர் தோல்விகள் கண்டதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சுருங்கியது. ஒரு கட்டத்தில் சீரியல் தொடர்களிலும் தன்னை வெளிக்காட்டினார். இந்நிலையில் கார்த்திகா கடந்த சில வருடங்களாக தன்னுடைய நண்பர் ரோஹித் மேனன் காதலித்து வந்தார்.

இந்நிலையில் கார்த்திகா நாயர் மற்றும் ரோஹித் மேனன் திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதில் சினிமா நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கிருந்து கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் கார்த்திகா நாயர் பதிவு செய்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கூட அவருடைய கணவர் அவருடன் இல்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு அவர் ‘இந்த அனைத்து புகைப்படங்களையும் எடுத்ததே தன்னுடைய கணவர் ரோஹித் தான்’ என கூறி பதிலளித்துள்ளார். இதோ அந்த பதிவு..

 

View this post on Instagram

 

A post shared by Karthika Nair (@karthika_nair9)