#image_title
சன் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று எதிர்நீச்சல் சீரியலாகும். இதில் நடிகை கன்னிகா ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக அதிகமான ரசிகர் பட்டாளமே இவருக்கு உருவாகி உள்ளது. இவர் மதுரையைச் சார்ந்தவர். 2002 ஆம் ஆண்டு வெளியான ‘5 ஸ்டார்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து தமிழில் எதிரி, டான்சர் ,வரலாறு, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற பல மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் 2009ஆம் ஆண்டு மலையாளத்தில் சிறந்த நடிகை என்ற விருது பெற்றுள்ளார்.
தற்பொழுது இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கத்பாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இந்நிலையில் பிரபல நடிகையான கனிகா தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘தனது அம்மா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டதாக கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
மேலும் அவருக்கு ஹிமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை உள்ளிட்ட பல வேதனைகளை அவர் சந்தித்தார் என்றும், சிகிச்சையின் போது என் அம்மா பட்ட வேதனைகளை பார்த்து நொந்து போனேன். அவரது மார்பகத்தை பாதுகாப்பு காரணத்திற்காக வெட்டி எடுத்தார்கள் .அதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது’ என்றும் மனவேதனையுடன் பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியை நடிகை கனிகா 2021 ல் லைஃப் அகைய்ன் யூடியூப் சேனலுக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…
நேபாளத்தின் சித்வான் பகுதியில் உள்ள சௌராஹா தெருக்களில் இரண்டு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக…
தமிழக விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், தமிழக அரசின் 'உழவன்' (Uzhavan) செயலி…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான…
தமிழகத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 29…