தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா திரைத்துறையை விட்டு விலகி இருந்த ஜோதிகா 2015ல் வெளியான ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். கடைசியாக அவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்பொழுது மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோடியாக நடிகை ஜோதிகா ‘காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஜோதிகா பிரபல கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் உடன் விமான பயணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் விரைவில் ஆசிய கிரிக்கெட் உலக கோப்பை தொடங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்…