Connect with us

23 வருஷம் கழிச்சு பிரபல நடிகரின் படத்தில் ரீஎன்ட்ரி கொடுக்க வரும் விஜய் பட நடிகை…! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!

CINEMA

23 வருஷம் கழிச்சு பிரபல நடிகரின் படத்தில் ரீஎன்ட்ரி கொடுக்க வரும் விஜய் பட நடிகை…! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!

 

இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் உருவான ‘காதல் கவிதை’ என்ற திரைப்படத்தில் ஜோதி என்ற கேரக்டரில் நடிகை இஷா கோபிகர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் முழுவதும் ஒரு கவிதை மாதிரி இருக்கும். பிரசாந்த் மற்றும் இஷா கோபிகர் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். இதனை அடுத்து அரவிந்த்சாமி நடித்த ‘என் சுவாச காற்றே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக இஷா கோபிகர் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

அடுத்ததாக அவர் விஜய் உடன் ‘நெஞ்சினிலே’, விஜயகாந்த் உடன் ‘நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின்பு இந்தியில் நடிக்க சென்றுவிட்டார். மிகவும் பிஸியாக இருந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து சற்று தள்ளி இருந்தார்.  ஹிந்தியில் அவர் பல வெற்றி படங்களை கொடுத்தார். 2001 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை சுமார் 11 ஆண்டுகள் அவர் பல படங்களில் ஹிந்தியில் நடித்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் அயலான். சையின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த அயலான் திரைப்படம் இந்த வருடம் தீபாவளி என்று ரிலீஸ் ஆகும் என்று படக்குழு தெரிவிதுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தமிழில் அயலான் படத்தின் மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார் நடிகை இஷா கோபிகர்.இது அவருக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரியாக அமையுமா?பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Continue Reading
To Top