Categories: சினிமா

17 வயசிலிருந்து சம்பாதிச்ச மொத்த சொத்தும் போயிருச்சு.. கதறி அழும் கௌதமி… போலீசில் பரபரப்பு புகார்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நடிகை கௌதமி.இவர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.  இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கௌதமி 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் ஏமாற்றி விட்டதாக கூறி புகார் அளித்துள்ளார். தான் 17 வயதில் இருந்து இதுவரை 125க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன்.

2004 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது சினிமாவில் இருந்து நான் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டேன். அப்போது நான் சம்பாதித்த பணத்தை வைத்து ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கி இருந்தேன். தற்போது அந்த இடத்தின் மதிப்பு 25 கோடியாகும். என்னுடைய குடும்ப தேவைக்கு மருத்துவ சிகிச்சைக்கும் அந்த இடத்தை விற்கலாம் என முடிவு செய்ததால் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவரிடம் தொடர்பு கொண்டு எனது நிலத்தை விற்று கொடுக்குமாறு கேட்டேன்.

அந்த நிலத்தை விற்று தருவதற்கான பவர் ஏஜென்ட் உரிமையை அவரிடம் கொடுத்த நிலையில் அவர் என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். எனக்கு சொந்தமான விவசாய நிலத்தை நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து தனக்கு 62 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தார். என்னுடைய எட்டு ஏக்கர் நிலத்தை அபகரித்து அவர் மோசடி செய்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனக்கு சொந்தமான 25 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌதமி புகார் அளித்துள்ள நிலையில் இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

5 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

5 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

5 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

5 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

5 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

5 மணத்தியாலங்கள் ago