“கோடி கோடியாய் சொத்து.. பவர் ஆப் அட்டர்னி கொடுத்ததால் வந்த வினை”… கௌதமி வழக்கில் அடுத்த ட்விஸ்ட்… ED நடத்திய மாஸ் ஆபரேஷன்….!

Spread the love

பிரபல பழம்பெரும் நடிகை கௌதமியின் சொத்துகளை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து அபகரித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அமலாக்கத் துறையினர் சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கௌதமி, தன் திரையுலகப் பயணத்தின் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்துகளை வாங்கி வைத்திருந்தார். இந்த நிலையில், அவரது புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளை மையமாக வைத்து இந்தச் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு கௌதமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, தனது சொத்துகளைப் பராமரிப்பதற்காக சினிமா தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை ‘பவர் ஆஃப் அட்டர்னி’யாக நியமித்தார். ஆனால், இதனைப் தவறாகப் பயன்படுத்தி அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்த கௌதமியின் பல கோடி மதிப்புள்ள சொத்துகளைத் தங்களது பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர். இது குறித்து 2023-ஆம் ஆண்டு கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள், மகன் சிவா உட்பட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

தற்போது இந்த நில மோசடி வழக்கில் பெருமளவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இன்று காலை முதலே சென்னை மற்றும் மதுரையில் அழகப்பனுக்குச் சொந்தமான இடங்களில் அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் காவல்துறையின் விசாரணையைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசின் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

5 மணத்தியாலங்கள் ago