Connect with us

என் கணவரோட அந்த படம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது… ஓப்பனாக சொன்ன தேவயானி!

CINEMA

என் கணவரோட அந்த படம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது… ஓப்பனாக சொன்ன தேவயானி!

 

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், பெங்காளி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் தேவயானி ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னை வைத்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். திருமணமான பிறகு தேவயானி பல சீரியல்களிலும் நடித்து வந்தார்.

   

தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் 6 வருடம் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலிலும் தேவயானி நடித்தார். இப்போதும் அவர் சீரியலில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார். ஆனால் ராஜகுமாரனுக்கு அதன் பிறகு இயக்குனராகும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் கடைசியாக இயக்கிய காதலுடன் மற்றும் திருமதி தமிழ் ஆகிய திரைப்படங்கள் படுதோல்வி படங்களாக அமைந்தன.

இதில் திருமதி தமிழ் படத்தில் ராஜகுமாரனே கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. அவரைப் பற்றி மீம்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில்தான் சந்தானம் தான் ஹீரோவாக நடித்த ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ திரைப்படத்தில் அவரை ஒரு காமெடியனாக்கி அவர் தன் ஸ்டைலில் பயங்கரமாக கலாய்த்திருப்பார்.

இந்நிலையில் தேவயானி தன் கணவரின் நடிப்பு பற்றி பேசும்போது “எனக்கு என் கணவர் நடித்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் காமெடி சுத்தமாகப் பிடிக்காது. அவர் நடித்த படத்தில் பிடித்தது என்றால் அது கடுகுதான். அது அவருக்காகவே எழுதப்பட்ட கதை. காமெடி என்றால் நான் நடித்த சூர்யவம்சம் படக் காமெடிதான் பிடிக்கும்” எனக் கூறியுள்ளார். விஜய் மில்டன் இயக்கிய கடுகு திரைப்படத்தில் ராஜகுமாரன் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
To Top