தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிபாஷா பாசு. அப்ப படத்தில் விஜய், ஜெனிலியா மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சச்சின் திரைப்படத்திற்கு பிறகு பிபாஷா பாசு வேற எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இன்றும் பாலிவுட்டில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.
சினிமாவில் பிஸியாக இருந்த இவர் நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில் அது உண்மை இல்லை என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 2016 ஆம் ஆண்டு அலோன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த கரன்சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.
அவருக்கு தேவி என பெயரிட்டுள்ள நிலையில் தனது மகளுக்கு இதயத்தில் இருக்கும் பிரச்சனை பற்றி தற்போது பிபாஷா கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்ததும் மூன்றாம் நாளில் அவரது இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த ஓட்டை தானாக சரியாகிறதா என அடிக்கடி ஸ்கேன் எடுத்து பார்க்க சொன்னார்கள். ஓட்டை பெரியதாக இருந்தால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.
மூன்று மாதங்களில் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். என்னுடைய மகளின் எதிர்காலத்துக்காக இப்படி ஒரு முடிவை ஒப்புக்கொண்டேன். ஆப்ரேஷன் தியேட்டரில் ஆறு மணி நேரம் என் வாழ்க்கை நின்று விட்டது போல எனக்கு இருந்தது. ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்து தற்போது தேவியின் நலமாக உள்ளார் என்று கண்ணீருடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…