குட்டையான உடையில் படு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அர்ச்சனா… நீங்களா இப்படி?… ஷாக்கான ரசிகர்கள்…

By Begam

Published on:

தொகுப்பாளராக களம் இறங்கி அனைவரின் மனதிலும் தனது அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் விஜே அர்ச்சனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், இவர் நிஜத்தில் குழந்தை மனம் கொண்டவராம்.

   

ஆனாலும் இவருடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து தான் வந்தனர். இவர் டிக் டாக் மூலமாக அனைவரின் மனதிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்பொழுது தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறிவிட்டாலும் இப்பொழுதும் அதே போட்டோ ஷூட் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டே தான் வருகிறார்.

இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். ஆனால் இவர் திடீரென ராஜா ராணி 2 சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் விலகினார். இதற்கு பிறகு அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. ஆனால் விலகியதற்கான காரணத்தையும் கூறவில்லை. தற்போது அவர் அருள்நிதி நடிக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அர்ச்சனா.

இவர் திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய பிறகு தற்போது சற்று கிளாமராகவும் உடை அணிய தொடங்கியுள்ளார். தற்பொழுது மிக குட்டையான உடையில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நீங்களா இப்படி?’ என்று அதிர்ச்சியாக உள்ளனர்.