Connect with us

“ஏன் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா…? இமானை தூண்டி விட்டிருக்காங்க”… பிரபல நடிகையின் பகீர் பேட்டி…

CINEMA

“ஏன் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா…? இமானை தூண்டி விட்டிருக்காங்க”… பிரபல நடிகையின் பகீர் பேட்டி…

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த சில நாட்களாக இவர் மீது மக்களுக்கு இருந்த நல்ல அபிப்ராயம் மாறத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமான் சிவகார்த்திகேயன் மீது வைத்த குற்றச்சாட்டு தான். அந்த பேட்டியில் அவர்’ சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் அதுகுறித்து, வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் கூறி திடீரென அதிர்ச்சியை கிளப்பியிருந்தார்.

   

இதைத்தொடர்ந்து  ‘சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்று இமான் குற்றம் சாட்டியிருப்பதை, இமான் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் கண், காது, மூக்கு வைத்து இமானின் முன்னாள் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறி விமர்சித்து வருகின்றனர். இந்த சர்ச்சையில் வான்டடாக வந்து மூக்கை நுழைத்து இமானின் முன்னாள் மனைவியும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியது மேலும் சந்தேகத்தை கிளப்பியது.

இப்படி இந்த விவகாரம் இணையத்தில் பூதாகரமாய் வெடித்துக் கொண்டிருக்க நெட்டிசன்கள் ஒருபுறம் அவரை திட்டி வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த விஷயம் தொடர்பாக சிவகார்த்திகேயன் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மௌனம் காத்தே வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் பிரபலங்கள் பலரும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது நடிகை அனுபிரமி சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘இந்த விஷயம் அவரது குழந்தைகளை பாதிக்கும் என்றால், 2-வது திருமணம் செய்துகொண்ட பின் இமான் ஏன் இந்த விஷயத்தை பற்றி கூற வேண்டும். இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் மீது தவறு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாமல் அவர் மீது சிலர் வன்மத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். தொகுப்பாளராக இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

வளர்ந்து வரும் ஒரு நடிகர் மீது அசிங்கத்தை சுமத்துவதற்கு காரணம் என்னவாக இருக்கும், சிவாகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காத சிலர் இமானை தூண்டிவிட்டு இவ்வாறு செய்திருக்கிறார்கள். இமான் தனது குழந்தைகளுக்காக இந்த விஷயத்தை வெளியில் சொல்லவில்லை என்று சொல்கிறார், ஏன் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Continue Reading
To Top