மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அஞ்சு குரியன்.
நடிகர் நிவின்பாலியின் நேரம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சென்னை டு சிங்கப்பூர், இக்லூ மற்றும் ஜூலை காற்றில் சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் அஞ்சு குரியன் கடைசியாக நடித்த திரைப்படம் என்றால் அது மிர்ச்சி சிவாவின் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் என்ற திரைப்படம் தான்.
இதனை தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் குறும்படங்கள் மற்றும் மியூசிக் ஆடியோ ஆகியவற்றிலும் பிசியாக நடித்து வருகின்றார்.
இவருக்கு தமிழிலும் ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அந்த படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் திரைப்படத்தில் இவர் நடித்து வருகின்றார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி வித்தியாசமான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அஞ்சு குரியன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து உள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…