நடிகை ஆண்ட்ரியா தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் ‘திறமையான நடிகை’ என்று பலரால் சொல்லப்படுபவர் நடிகை ஆண்ட்ரியா. வடசென்னை, தரமணி போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
பின்னணி பாடகியான ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். சினிமா துறையில் கொடி கட்டி பறந்த இவர் நடுவில் ஏராளமான கிசு கிசுக்கள், சர்ச்சைகளுக்கு உள்ளானார். அதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர் சினிமா துறையை விட்டு சில நாட்கள் விலகி இருந்தார்.
இதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா தனது முழு நேரத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ”ஊ சொல்றியா மாமா.. ஊஹூம் சொல்றியா மாமா” பாடலை பாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவர் நடிப்பில் ‘பிசாசு 2’ படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து அவர் அனல் மேலே பனித்துளி, மாளிகை, செல்லக்கூடாது என்ற பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை ஆண்ட்ரியா, தற்பொழுது கண்ணாடி முன் நின்று தனது முன்னழகைக் காட்டி எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து உள்ளது. தற்பொழுது இந்த புகைப்படங்கள் அதிக லெக்ஸ்களை வாரி குவித்துள்ளது.