தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை அம்மு அபிராமி. 24 வயதாகும் இவர் பைரவா, என் ஆளோட செருப்ப காணோம் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
ஆனால் இவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் கிடைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் அசுரன் திரைப்படத்தில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் வந்து தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்.
ஹீரோயினியாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து இவர் நடித்து வருகின்றார். அதன்படி இவர் நடித்த கண்ணகி, ஹாட்ஸ்பாட் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தற்போது மெய்ப்பட, யார் இவர்கள் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துவரும் நிலையில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் . இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
அதன்படி தற்போது ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை இவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் சற்று குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இருந்தாலும் அமுல் பேபி போல இருக்கும் இவரை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…
அண்ணா பல்கலைக்கழக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த திமுக அனுதாபி ஞானசேகரன், திடீரென அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பது…
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு விடுத்த "திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்" என்ற எச்சரிக்கை உலக…