தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்ட நாயகிகளில் ஒருவர் தான் நடிகை அம்பிகா. இவருடைய தங்கையும் மிகப்பெரிய நடிகையாக அந்த காலகட்டத்திலேயே பல வந்தவர். அவர்தான் நடிகை ராதா. நடிகை அம்பிகா நடித்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. எண்பது காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவருடன் பல திரைப்படங்களில் நடிகை அம்பிகா நடித்தார். அதே சமகாலத்தில் இவருடைய தங்கை ராதாவும் இவருக்கு போட்டியாக நடித்து வந்தார். கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான மாமாங்கம் என்ற மலையாள திரைப்பட மூலமாக அம்பிகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
1988 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இடத்தை பிடித்து தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அம்பிகா வைத்திருந்தார். ரஜினி நடித்த மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் தான் படிக்காதவன். இந்த திரைப்படத்தில் சாராயம் காட்சி விற்கக்கூடிய ஒரு இளம் பெண்ணாக இவர் நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு அனைவரையுமே வியக்க வைத்தது. தமிழ் சினிமாவின் படம் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.
அவன் இவன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு தாயாக இவர் நடித்த கதாபாத்திரம் அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இன்று வரை பெரிய திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அம்பிகா காக்கிச்சட்டை படத்தில் தமிழுடன் ஒரு பாடலுக்கு நடனமாடிய போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். கமல்ஹாசன் மற்றும் அம்பிகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆனது. இந்த நிலையில் கமலுடன் டான்ஸ் ஆட முடியாமல் தவித்த கதையை நடிகை அம்பிகா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், காக்கி சட்டை படத்தில் வானிலே தேனிலா பாடலில் கடைசியில் நானும் கமலும் ஒரு ஸ்டெப் போடுவோம். அதன் பிறகு கமல் மட்டும் தனியாக ஸ்டைலான அந்த கஷ்டமான ஸ்டெப்பை ஆடுவார். உண்மையில் அந்த ஷாட்டில் நானும் இருந்தேன். அந்த ஸ்டெப்பை நானும் போட வேண்டி இருந்தது. அப்போது வெயில் அதிகமாக இருந்தது. அப்ப நான் சொன்னேன் இந்த மூவ்மெண்ட்ஸ் நான் பண்றதுக்குள்ள வெயிலும் போயிடும், டைரக்டர் கிட்ட இருந்து தான் வாங்கணும் என்று நினைத்தேன். பிறகு மாஸ்டர் கிட்ட போய் நான் சுத்தி அங்கிட்டு போற மாதிரி பண்ணுங்க என ஐஸ் வைத்தேன். அப்படியே அந்த காட்சி எடுக்கப்பட்டது. அன்று கமல் மட்டும் அந்த ஷாட்டை தனியாக பண்ணவில்லை என்றால் அவ்வளவுதான் என்று அம்பிகா பேசியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…