#image_title
பிரபல நடிகையான அமலா பால் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஆர்யா ஆகியோருடன் இணைந்து அமலாபால் நடித்துள்ளார். தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அமலாபால் நடித்தார். அப்போது இயக்குனர் ஏ.எல் விஜய்க்கும் அமலாபாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அமலாபால் ஏ.எல். விஜய் விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை அமலபால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 2 மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அமலாபால் அறிவித்தார்.
அந்த தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அமலா பால் தனது குழந்தைக்கு இலை என பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் அமலாபால் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தேன். அதனால்தான் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டோம். நான் முதலில் ஹீரோயின் என்பது எனது கணவருக்கு தெரியாது.
முதல் வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்தித்ததால் இரண்டாவது அமையும் வாழ்க்கை மீது எனக்கு மிகவும் தயக்கம் இருந்தது. ஆனால் எனது கணவர் அனைத்தையும் மாற்றிவிட்டார். நாங்கள் லிவிங் டுகதர் வாழ்க்கையில் இருந்தோம். டேட்டிங் ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே நான் கர்ப்பமாகி விட்டேன். இதனால் உடனடியாக திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…